×

மனித எலும்புகள்..கருப்பு நிற ஷூ!: 1986ல் காணாமல் போன மலையேற்று வீரரின் உடமை 37 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..!!

ஜெர்மனி: மலையேற்றத்தின் போது மாயமான ஜெர்மன் நாட்டவரின் எலும்புகள் உள்ளிட்டவை 37 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த 38 வயதுடைய நபர், கடந்த 1986ம் ஆண்டு மலையேற்றத்தின் போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி தியூடல் பனிப்பாறை வழியாக மலையேறிய நபர்கள், மனித எலும்புகள் கருப்பு நிற ஷு உள்ளிட்ட உடமைகளையும் கண்டறிந்தனர்.

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அவை காணாமல் போன ஜெர்மனியை சேர்ந்தவரின் எலும்புகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலையேறுபவர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மனித எலும்புகள்..கருப்பு நிற ஷூ!: 1986ல் காணாமல் போன மலையேற்று வீரரின் உடமை 37 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Germany ,
× RELATED பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல்